கள்ளக்கூட்டணி யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியுமென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடியுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காட்டி பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ், ‘திமுக ஆட்சியில் ஒரு புயலையே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பல புயல்களை எதிர்கொண்டோம். கனமழையால் தூத்துக்குடி மிதந்து கொண்டிருந்த போது டெல்லிக்கு சென்றவர் ஸ்டாலின்’ என்றார்.