தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணிற்கு திருமணமாகி 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷன் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தனக்கு குழந்தைகள் இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் நேற்று (ஏப்ரல் 11) 2 குழந்தைகளையும் தாக்கியுள்ளார். இதில், 3 வயது குழந்தை உயிரிழந்தது.