நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நேற்று நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார்.

தற்போது “சினிமாவில் நாம் பேசுகிற வசனம், சமூகத்தில் மிகப் பிரபலமான ஒருவர் வாயிலாக சென்றடையும்போது அது நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான் நான் பார்க்கிறேன். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உடன் சேர்த்து அண்ணாவையும் படிக்க வேண்டும்” என கல்வி விருது வழங்கும் விழாவில் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டி நடிகர் விஜய் பேசியது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.