பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் மிகப் பெரிய ஹிட் ஆன நிலையில், அதற்குபின் பிரபாஸ் நடித்த படங்களில் எல்லாம் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்தி விட்டார். பாகுபலி திரைப்படத்திற்கு அவர் 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். எனினும் அவர் 2 பாகங்களுக்கும் சேர்த்து 5 வருடங்கள் ஒதுக்கி இருந்தார்.

இருப்பினும் அதற்குபின் பிரபாஸ் நடித்த படங்கள் தோல்வியானதால் தனது சம்பளத்தை திருப்பி கொடுக்கும் நிலை வந்தது. ராதே ஷ்யாம் படம் தோல்வியானதால் அதன் 50% சம்பளத்தை அவர் விட்டுக்கொடுத்தாராம். ஆதிபுருஷ் திரைப்படத்துக்காக பிரபாஸ் மிகப் பெரிய தொகையை வாங்கி இருக்கிறார். அதாவது, அவருக்கு 150 கோடி சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.140 கோடி வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.