நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கர்ப்பிணி பெண்கள் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் பெற்று நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் பிறக்கப் போகும் குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றன. இதற்காக மத்திய அரசை பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிகளுக்காக தொடங்கியது. இதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு நான்கு தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்ய ஆரம்ப சுகாதார நிலையத்தை நாட வேண்டும்.

முழுவதுமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு முழு தொகையும் வழங்கப்படும். அரசு சுகாதார மையத்தில் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் சுகாதார மையத்தில் கூறியது போல தடுப்பூசி செலுத்த வேண்டும். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு தான் இந்த திட்டத்தின் மூலமாக தொகை வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது.