கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது. மேலும் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி தரப்பு அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.