தமிழகத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்மூலம் பயிற்சி வகுப்புகள் முடித்த 3 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பெண்கள் நுழைய முடியாத இடங்களாக கோயில் கருவறைகள் இருந்த நிலை தற்போது மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. திமுக ஆட்சியில் ‘கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்’ என அவர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.