நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், முன்பு விநாயகர் சதுர்த்தி அரசு பொது விடுமுறை 17ஆம் தேதி என அறிவித்து, பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 18ஆம் தேதிக்கு மாற்றி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 18 பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்.19 விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களை கணக்கிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் குழப்பம் எழுந்துள்ளது. இதனால், விடுமுறை தேதியை 19ம் தேதிக்கு பதில் 18ம் தேதிக்கு மாற்றம் வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது