பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு தான். தித்திக்கும் கரும்பில் அதிகமான சத்துக்கள் உள்ளது. அதாவது நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்துமே இதில் அடங்கியுள்ளன. இந்த கரும்பை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. அதன்படி சோர்வாக இருப்பவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும் பண்பு கரும்பில் உள்ளது. கரும்பில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் தாதுக்கள் நிறைந்திருப்பதால் பருக்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கிறது.

இதில் உள்ள பொட்டாசியம் மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதுடன் கரும்பை கடித்து வெல்லும் போது ஸ்டிரெஸ் பஸ்டராகவும் உள்ளது. கரும்பு அதிக ஆண்டி ஆக்சிடென்ட் மற்றும் ஃபிளவனோய்டுகள் புற்றுநோய் வராமலும் எதிர்த்து போராடுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் இருக்கும் சோடியம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும். கரும்பில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் கல்லீரல் ஆற்றலை மேம்படுத்துகிறது. முகத்தில் சுருக்கங்கள் மற்றும் சரும பாதிப்புகள் வருவதை தடுத்து வயதான தோற்றத்தை தாமதப்படுத்தும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நாம் உண்ணும் உணவுகளை சீராக செரிக்க வைப்பது மட்டுமல்லாமல் கொழுப்பு சேர்க்கையை தவிர்த்து உடல் எடையை குறைக்கவும் கரும்பு பெரிது உதவுகிறது. மேலும் கரும்பில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.