இன்றைய காலகட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையில் பல மாற்றங்கள் வந்துள்ளதால் பல உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. செல்களை பராமரித்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

குறிப்பாக சருமத்திற்கு இயற்கையான பொழிவை தருகிறது. சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களையும் இது குணப்படுத்தும். இது இயற்கையான மசகு எண்ணெய் என்பதால் முட்டி போன்ற எலும்பு கூடும் பகுதிகளில் இருக்கும் தசைகள் வறட்சி அடையாமல் பாதுகாத்து வழுவழுப்பு தன்மையை தக்க வைக்கும். மூளையில் உள்ள அணுக்களை தூண்டிவிட்டு மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.