இணையத்தில் பல விதமான விடியோக்கள் வைரலாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதோடு, மனதை நெகிழ வைக்கக்கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
கடுமையான கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல், சில்லென்ற காற்றுக்காகக் குழந்தைகள் சிலர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று நிம்மதியாகத் தூங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் அனைவரும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர்.
Viral Video: गर्मी से हुए परेशान तो ATM के अंदर ‘चैन की नींद’ सोने पहुंच गए बच्चे, कैमरे में कैद हुआ अनोखा नजारा https://t.co/SveYDEtePr
“>
இந்தச் சூழ்நிலையில், வீடுகளில் மின்சாரம் இல்லாதபோதோ அல்லது கடுமையான புழுக்கம் நிலவும்போதோ, குழந்தைகள் சிலர் குளிரூட்டப்பட்ட ஏடிஎம் மையத்தை தங்களின் ஓய்வு இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏடிஎம் மையத்தின் உள்ளே இருக்கும் சில்லென்ற ஏசி காற்றில், எந்தவித கவலையுமின்றி தங்களின் தூக்கத்தை குழந்தைகள் அனுபவிக்கும் இந்த வித்தியாசமான காட்சி அங்கிருந்த கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
ஏடிஎம் மையத்திற்குள் பணம் எடுக்க வந்த சிலர், குழந்தைகள் தூங்கும் இந்த அழகிய மற்றும் நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டு வியந்து, அதைத் தங்களின் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், ‘குழந்தைகளின் குறும்புத்தனமான மற்றும் புத்திசாலித்தனமான யோசனை’ என கமெண்ட் செய்து வருவதுடன், வெயிலின் கொடுமையையும் சுட்டிக்காட்டி இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
