கன்னி ராசி அன்பர்களே,

இன்று அற்புதமாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைகளை உங்களுக்கு ஏற்றார் போல் அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் சீராக அதிகம் பணி புரிய வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பயன்படுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திப்பீர்கள்.

இன்று மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வியாபாரப் போட்டிகள் விலகும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கிறது. வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவதால் பிரச்சனைகள் இருக்காது. புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் வெற்றி பெறும். கடன் பாக்கிகள் வசூல் ஆகும்.

இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக உள்ளது. சுயமரியாதை வெளிப்படும் ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். மன நிம்மதி அதிகரிக்கும். இன்று மாணவர்கள் துணிச்சலுடன் காணப்படுவீர்கள். விளையாடும் போது கவனமாக இருங்கள். சக நண்பரிடம் கோபப்பட வேண்டாம் .இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்