கடந்த வார இறுதியில் சீனாவின் பல பகுதிகள் கன மழை பெய்தது. இதன் காரணமாக சீனாவின் கிஹிஹார் நகரில் உள்ள பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் 15 பேர் சிக்கிய நிலையில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நான்கு பேர் மருத்துவமனையின் சிகிச்சை எடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகள் அதிகம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.