காங்கோ நாட்டின் நையகோவா பகுதியை சேர்ந்த முகுவா என்பவர் கடற்படை வீரராக இருக்கிறார். இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது மகனின் இறுதிச்சடங்கில் உறவினர்கள் நண்பர்கள் என பலர் பங்கேற்று கொண்டனர். அப்போது இந்நிலையில் முகுவா திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கி கொண்டு சுற்றி இருந்த அனைவரையும் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் பலரும் தெறித்து ஓடிய நிலையில் 9 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குவாவின் இந்த செயலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.