இந்தியாவை சேர்ந்த குர்விந்த் நாத் எனும் வாலிபர் கனடாவில் படித்துக் கொண்டே பகுதி நேரமும் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இரண்டு மணிக்கு குர்விந்த்க்கு பீட்சா ஆர்டர் வந்ததால் அதை டெலிவரி செய்ய சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் குர்விந்த் நாத்.

அவர் தனது பகுதிநேர வேலைக்காக பயன்படுத்தும் காரை அந்த மர்ம கும்பல் திருட முயற்சித்துள்ளது. இதில் குர்விந்த் நாத் தொடர்ந்து போராடியதால்  கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.