கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 4ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் எனவும், அதே போல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.