டெல்லியில் சமய்பூர் என்ற பகுதியில் உள்ள சலூன் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை  சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் கடை உரிமையாளரை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட 4 பேரை கைது செய்தது போலீஸ் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில் முதலில் வாய்த்தகராறில் தொடங்கி பின் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. 5 இடங்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளர். கைதானவர்கள் 18 வயதுக்கு கீழ் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.