பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். இந்த கட்சியின் மூலமாகத்தான் இவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது என்றும் தகவல் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் சமூக நலம் சார்ந்த பல விஷயங்களை பேசி நல்லவர் போல நடித்து வேஷம் போட்டு தான் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் என்று இணையவாசிகள் கொந்தளித்து வருகிறார்கள்.

ஏனெனில் சில நாட்களுக்கு முன்பாக கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் ஒருவர் விக்ரம் தன்னை காதலித்து ஜாதி ரீதியாக அசிங்கமாக பேசி இதுவரையிலும் 12 லட்சத்திற்கும் மேல் பணத்தைப் பறித்து உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டினார். அவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பரபரப்பை கிளப்பினார். அதோடு விக்ரமன் தன்னோடு மேனேஜர் என்ற ஒரு பெண்ணை அறிமுகம் செய்துவிட்டு அந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். இந்த விஷயம் எனக்கு கடைசியில் தான் தெரியவந்தது.

இதுபோன்று பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உறவில் இருந்துள்ளார் என்று கூறி விக்ரமன் பெண்களுடன் லீலை செய்த ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த சூழலில் விக்ரமன் தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு twitter மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில் கிருபா தனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் கிருபாவிடம் பெற்ற பொருட்களுக்கான பணத்தை திருப்பி கொடுத்ததையும் அவர் குறிப்பிட்டு இருந்ததற்கான ஆதாரத்தையும் அதில் இணைத்துள்ளார்.

இந்த ஆதாரங்களோடு கிருபா முனுசாமி என் மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. இந்த பிரச்சனையில் ஒரே ஒரு நபர் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளார். அது நான் தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.