பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கார்மென்ட் ஷோரூமில் மூன்று வயது பெண் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி கதவை விளையாடிய போது திடீரென குழந்தை மீது கதவு விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது.