சென்னையிலிருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருடப்பட்டுள்ளது. பிரேசிலில் அதிகாரிகள் பரிசோதித்தபோது ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள 495 டயர்கள் திருடப்பட்டது அம்பலமாகியது. இதையடுத்து கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கண்டெய்னரை கொண்டு சென்ற லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் வாயிலாக அவர்கள் சிக்கினர். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு கண்டெய்னரில் கொண்டு சென்றபோது திருட்டு நடந்துள்ளது.