மதுரை மாவட்டம் கருவனூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைப்பு மற்றும் வீடு சூறையாடப்பட்டுள்ளது. காருக்கு தீவைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல் முருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில் இருதரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் வீட்டை, திமுக கிளை செயலாளர் அடித்து நொறுக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகாரளித்துள்ளார்.