கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூரில் சாலையில் மண் கொட்டி, வார்டு உறுப்பினர் இடையூறு செய்கிறார் என புகாரளிக்கப்பட்டுள்ளது. மண் கொட்டியதை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னத்தில் அறைந்து, ஆபாச வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சக்திவேல் என்பவர் மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.