சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னழகு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தையும், பத்து மாதத்தில் ஆண் குழந்தையும் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த பொன்னழகு நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னழகுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.