பிரேசிலில் உள்ள அமேசானாஸ் மாநிலத்தின் என்விரா நகரத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒரு குழந்தை உட்பட 12 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஏக்கர் மாநிலத்தின் தலைநகர் ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 12 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது விமான விபத்தாக இது பிரேசிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.