தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி நேற்று மதியம் ரெண்டு மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஈரோடு மற்றும் திருநெல்வேலி ரயில் சேவையை சேலம் ரயில் கோட்டம் ரத்து செய்தது. இந்த நிலையில் ரயிலில் பயணிக்க முன் பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.