47 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த புத்தக கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் புத்தக கண்காட்சி தினம் தோறும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.