தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, கே.சி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் 5,600 அபராதம் வசூலித்தனர்.