வேதாரண்யம் பகுதியில் நேற்றைய தினம் கடல் சீற்றமாக ஆறு காட்டுத்துறை, வெள்ள  பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000-ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களுடைய பைபர் படகு மற்றும் மீன்பிடி வலைகளை மீனவர்கள் கரையில் பத்திரமாக வைத்துள்ளனர்.

கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் என்ற காரணத்தினால் வெளியூர்களிலிருந்து மீனவர்கள் இங்கு தங்கி இருந்து மீன் பிடிக்க வருகின்றனர். ஆனால் தற்போது கடல் சீற்றமாக இருப்பதனால் வெளியூர் மக்களும் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.