கடற்படைக்கு 6 ரோந்து கப்பல்கள் வாங்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மசாகான் டாக்யார்டு ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு 1614.89 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ரோந்து வாகனங்கள் பேரிடர் மீட்பு பணி போன்றவற்றில் முக்கிய பங்காற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.