கடக ராசி அன்பர்களே,

இன்று சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் ஈடுபட வேண்டி இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை மிக கவனமாக கையாள வேண்டி இருக்கும் .ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் எதிலும் செயல்படுங்கள். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் .வீடு வாங்க போட்ட திட்டம் வெற்றி பெறும். விடாமுயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

இன்று  ஆர்வத்துடன் பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் சிந்தனை மேலோங்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம்   எடுத்துக் கொள்ளுங்கள் .வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். காரியங்களில் ஏற்பட்ட தாமதம் விலகி செல்லக்கூடும். உடல் சோர்வு மன சோர்வு கொஞ்சம் இருக்கும் .மிகவும் நெருங்கிய வரை நீங்கள் பிரிய வேண்டிய சூழல் இருக்கும்.

இன்று கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து  வேற்றுமை உண்டாகக்கூடும் .பார்த்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டம முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

இன்று யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது. ஜாமின் கையெழுத்து போடக்கூடாது மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று எதையும் செய்யக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என இருக்க பாருங்கள். அனைத்து பிரச்னைகளும் சரியாகும். மனக்குழப்பத்தின் காரணமாக சில முடிவுகள் தவறாக போகக்கூடும் .பார்த்து கவனமாக இருந்து  கொள்ளுங்கள். இன்று பெண்களுக்கு என்ன சமையல் செய்ய வேண்டும் என்ற குழப்பமே பெரிய குழப்பமாக இருக்கும். இறைவனிடம் சரண் அடையுங்கள்.

இன்று எல்லா விஷயத்தையும் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.  இன்று மாணவர்கள் தைரியமாக எதையும் செய்யுங்கள். கோபம் வேண்டாம் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி மீது முழு அக்கறை தேவை. புது விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும். இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண்  : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்