கடக ராசி அன்பர்களே,

இன்று தைரியமும் நம்பிக்கையும் மேம்படும் நாள் என்றே சொல்ல முடியும். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். நல்ல மனதிற்கு சொந்தக்காரராக காணப்படுவீர்கள். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். சங்கிலி தொடர் போல் வந்த கடன் சுமை குறையும். உடல் நலம் சீராகி உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பேச்சு திறமையால் மேல் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வாழ்க்கையில் நீங்கள் சிரமப்படாமல் முன்னேறி செல்ல முடியும். தாயின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் காசு பணத்தை பத்திரப்படுத்துவதும் சேமிப்பதும் ரொம்ப நல்லது.

இன்று பெண்களுக்கு பணி சுமை அதிகமாக  இருக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். மாணவர்கள் கல்வி மீது அதிக அக்கறை கொள்ளுங்கள். நல்ல விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்