தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக் ராஜன் .27 வயது இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரை திடீரென்று காணவில்லை. இதனையடுத்து அவருடைய பாட்டி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கில் கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆன கேசவ மூர்த்தியை விசாரணை செய்துள்ளனர்.அப்போது அவர் அதிர வைக்கும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது ஆண்மை குறைவுக்காக அசோக்  சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்த போது அவர் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார் .

மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்த அவரை ஆண்மை வீரியத்துக்கான மருந்தை அதிகமாக கொடுத்து அசோக்கை பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்துள்ளார் கேசவமூர்த்தி. பின்னர் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டை சுற்றி புதைத்ததாக கூறியுள்ளார். இதில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான எலும்புக்கூடுகள் சிக்கியன. இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அசோக்கை துண்டு துண்டாக வெட்டி அவருடைய இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றை சமைத்து சாப்பிட்டதாகவும் தான் வளர்க்கும் நாய்க்கு அதை போட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.