நேர்காணலுக்காக கருவூலத்துறை அலுவலகங்களுக்கு வருகின்ற ஓய்வூதியத்தாளர்கள் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அவற்றை தெரிவிக்க புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு வேலை நாட்களில் கருவூலத்துறை அலுவலகங்களுக்கு நேர்காணலுக்காக ஓய்வூதியதாரர்கள் வரலாம். நேர்காணலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் கருவூலர் கணக்கு துறை ஆணையரகத்துக்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவிக்கலாம்.

அதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் ஆன 1800 599 5100, 9444674662, 9444316043, 9444574706 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். மேலும் மின்சார வாரியம், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.