மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் ஐ.ஐ.டி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த வருடம் என் சி இ டி நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது இணையதளம் மூலமாக தொடங்கியுள்ளது.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் https://ncet samarth.ac.in என்ற இணையதள மூலமாக ஜூலை 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.