திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீட்டுக்கு வந்த எல்டிஎப் ஆளுங்கட்சி வார்டு உறுப்பினர் உடலில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல் அருகே முடக்கல் பஞ்சாயத்து 19 ஆவது வார்டு உறுப்பினர் பிஜு (53) என்பவர் உடலில் தூக்கி சுடுகஞ்சி ஊற்றியதால் காயம் அடைந்தார். மார்பு மற்றும் வயிற்றில் காயம் அடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவத்தில் சஜி (46) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.