மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிஎஸ்கே ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மற்றும் மும்பை போட்டியை காண மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சிலர் ஒன்று கூடினர். அப்போது பந்தோபந்த் (66) சிஎஸ்கே ரசிகர், ரோகித் சர்மா அவுட் ஆனதை கொண்டாடினார். இதனால் கோபமடைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.