சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் சந்திர பிரசாத்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் சேதுராபட்டியில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் சந்திர பிரசாத் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சந்திர பிரசாத் ரயிலில் பயணித்த 26 வயதுடைய பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் சந்திர பிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்ததும் பெண் வழக்கறிஞர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்திரபிரசாத்தை கைது செய்தனர்.