திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் இருந்து சத்திரப்பட்டி, கே.பெரியபட்டி, ஆலம்பட்டி புதூர் வழியாக திருச்சி நோக்கி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று மாலை மணப்பாறையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயணித்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகே சென்றபோது கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த தண்ணீர் செல்லும் வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மகாலட்சுமி, தேவிகா, நாகலட்சுமி, பிரியதர்ஷினி என மாணவ மாணவிகள் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 20 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.