கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் நகரின் மையப்பகுதியில், ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு – குருவாயூர் வழித்தடத்தில் சென்ற அந்தப் பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென நெருப்புப்பொறி கிளம்பி, பேருந்து நகரும்போதே தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பேருந்து நின்ற சில நொடிகளிலேயே பயணிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் தள்ளாமல், மிகுந்த நிதானத்துடன் மின்னல் வேகத்தில் கீழே இறங்கியதால் நூலிழையில் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
True Kerala Story in 60 Seconds.
Ottapalam a small town in Palakkad, but what happened there is a masterclass in crisis management.
A moving bus caught fire & you can see a 60 second display of citizen bravery.
10th Second: The bus doors opened. People started coming out.… pic.twitter.com/7usNBTGhyZ
— FeverChills🥴 (@RebelR3volution) February 18, 2026
இந்தச் சம்பவத்தின் போது அந்தப் பகுதி மக்கள் காட்டிய மனிதாபிமானமும், துரித செயல்பாடும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. பேருந்து தீப்பிடித்த இடத்திற்கு மிக அருகிலேயே பெட்ரோல் பங்க் இருந்ததால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். ஆனால், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும் கடைக்காரர்களும் தங்கள் கையில் இருந்த தீயணைப்புக் கருவிகளுடன் ஓடிவந்து, தீயை அணைக்கப் போராடினர். செல்போனில் வீடியோ எடுக்காமல், உயிரைக் காப்பாற்றத் துடித்த அந்தப் பொதுமக்களின் செயல் ஒரு ‘மாஸ்டர் கிளாஸ்’ எனப் போற்றப்படுகிறது. சரியான நேரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், ஒரு மிகப்பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
