உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது.

அதாவது ஒரே போன் நம்பரை வைத்து, 4 போன்களில் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு போன்களிலும் வாட்ஸ்அப் தனித்தனியே இயங்கும். பிரைமரி மொபைல் போனை தொடர்ந்து 14 நாட்கள் பயன்படுத்தாவிட்டால், மற்ற போன்களிலிருந்து வாட்ஸ்அப் தானான லாக்அவுட் ஆகிவிடும். இந்த புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.