உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  சேவைகளை வழங்கி வருகிறது.  அந்தவகையில் நம் அனைவருக்கும் தெரிந்த ஃபைபர் நெட்வொர்க் சேவையைப் போல  அல்லாமல்  மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் AirFiber என்ற புதிய Wi-Fi சேவையை கொண்டு வருகிறது. இது கேபிள்கள் அல்லாத புதிய தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இவை அருகிலுள்ள ஜியோ டவர்களில் இருந்து சிக்னல்களைப் பெறுகின்றன. இதன் மூலம் வழக்கமான பிராட்பேண்ட் போன்று வேகமான இணைய சேவைகளை பெற முடியும். அதிவேக இன்டெர்நெட் சேவைகளை வழங்கி வரும் ஜியோவினுடைய அடுத்த மைல்கல்லாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.