மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல் ஒரே மோட்டார் சைக்கிளில் 9 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வாலிபர் ஓட்டும் பைக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 9 பேர் அமர்ந்துள்ளனர். எவ்வித அச்சமும் இன்றி, அதிக பாரத்துடன் அந்தப் பைக் சாலையில் வேகமாகச் செல்வது பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
मध्यप्रदेश के कटनी जिले से एक हैरान करने वाला और लापरवाही भरा वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है. वीडियो में साफ देखा जा सकता है कि एक युवक मोटरसाइकिल पर महिलाओं और बच्चों समेत 9 लोगों को बैठाकर बेखौफ सफर कर रहा है. देखें वीडियो#MPNews #Viral #ViralVideo #Katni… pic.twitter.com/6kVFs4cWhv
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) March 1, 2026
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதிலிருந்து, அந்த இளைஞரின் பொறுப்பற்ற செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரே ஒரு விநாடி நிலை தடுமாறினாலும் 9 உயிர்களும் ஆபத்தில் முடியும் என்பதால், இது போன்ற அலட்சியமான பயணங்கள் உயிருக்கே உலை வைக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
