ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு “நகர்ப்புற உயரடுக்கின் கருத்து” என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் சட்ட அங்கீகாரம் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது. இந்த மனுக்கள் “தொலைநோக்கு தாக்கங்களை” கொண்டிருப்பதாகவும், நாட்டின் அனைத்து மக்களின் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அரசாங்கம் கூறியது.

இந்நிலையில் ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கருத்து தெரிவித்துள்ளார். ட்வீட்டில், ஒரே பாலினத்தவர்களின் திருமணம் நகர்புற மேட்டிமைத்தனம் கிடையாது. அது மனிதர்களின் தேவை. கருத்து கிடையாது, தேவை. இன்னும் சொல்லப்போனால் அது மனித உரிமை. இந்தியா போன்ற முன்னேறும் நாட்டில் ஒரே பாலினத்தவர்களின் திருமணத்தை குற்றமாக்கக் கூடாது. சாதாரணமாக்க வேண்டும் என்றுள்ளார்.