இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரே இரவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில் பயங்கரவாதிகள் வெடிபொருள் கிடங்கு ஒன்றில்  நுழைவதை அடையாளம் கண்டதும் இஸ்ரேல் தரப்பிலிருந்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஹமாஸ்  தளபதிகள் சுட்டு கொல்லப்பட்டதுடன் அந்த கட்டிடம் மற்றும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.