தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்காக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கோவை பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கோயம்புத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. ஒரே வாக்குச்சாவடியில் மட்டும் 830 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இதில், அரசியல் தலையீடு இருக்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது” என தெரிவித்துள்ளார்.