நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில்,  வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம் வேலை நாளாக கணக்கில் கொள்ளப்பட்டு, அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்ததாக கணக்கிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பினை தற்போது அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.