உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது அப்பகுதியில் உள்ள தெருநாய் ஒன்று பாதியாக வெட்டப்பட்ட ஒரு மனிதனின் கையை கவ்வியபடி அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இதைக் கண்டு அங்கிருந்த மக்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் அந்த நாய் அந்த கையை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது. அந்த கை யாருடையது? எங்கிருந்து நாய் அதை எடுத்தது? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடந்தி வருகிறது.