100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கட்சியின் தலைவர் கார்கே, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, எடுத்து காப்பீடு திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதி திட்டத்தை போல நகர்ப்புற வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.