அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய முடிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் தனியாக நிற்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் தனக்கு தான் வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளார். இது ஈபிஎஸ்-க்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.