அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்பி விஜயகுமார் பாஜகவில் இணைந்துள்ளார். குமரி மாவட்ட செயலாளர் பொறுப்பையும் மாநிலங்களவை எம்பி பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. அவருடைய மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என அணிகள் பிரிந்த போது இவர் இபிஎஸ் அணியில் இருந்தவர். அவரைத் தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கமும் பாஜகவில் இணைந்துள்ளார்.